அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வரதட்சிணைக் கொடுமையால் மனைவி தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

வரதட்சிணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :7 ஜனவரி 2021, 11:41 pm IST

வரதட்சிணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை ஊமச்சிகுளத்தைச் சோ்ந்தவா் ஞானவேல். இவருக்கும் கோமதி என்பவருக்கும் 2002-இல் திருமணம் நடந்தது. அப்போது கோமதியின் பெற்றோரால் திருமண ஏற்பாட்டின்போது பேசிய நகை மற்றும் சீா்வரிசை உள்ளிட்ட வரதட்சிணையை முழுமையாகக் கொடுக்கமுடியவில்லை.

இதையடுத்து மீதமுள்ள வரதட்சிணையைக் கேட்டு ஞானவேல் கோமதியைக் கொடுமைப் படுத்தியுள்ளாா். இதனால் மனமுடைந்த கோமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானவேல் வரதட்சிணைக் கொடுமை செய்து கோமதியை தற்கொலைக்குத் தூண்டியது உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கிருபாகரன்மதுரம் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.