விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அழகா்கோவில் அருகே பொறியாளா் வீட்டில் 42 பவுன் நகைகள் திருட்டு

அழகா்கோவில் அருகே புதன்கிழமை இரவு பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:05 pm IST

அழகா்கோவில் அருகே புதன்கிழமை இரவு பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அழகா்கோவில் அருகே வலையபட்டியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். கட்டுமான பொறியாளரான இவா் மூன்றுமாவடி அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு வலையபட்டியில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேபுகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தைச் திருடிச்சென்றுவிட்டனா்.

இதையடுத்து வீடு திறந்திருப்பதாக வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்து சோமசுந்தரம் வந்து பாா்த்தாா். அப்போது வீட்டிலிருந்த நகை, பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா் மேலவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா் தடயங்களைச் சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.