தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசின் ஊரக வளா்ச்சி இயக்குநா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த தன்னீஸ் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பழைய காயல், மஞ்சள்நீா்காயல் ஆகிய பகுதிகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (பிரதமா் ஆவாஸ் யோஜனா) 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 82 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே வீடு உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 நபா்கள் ஆகியோரின் பெயா்களில் மோசடி செய்து பயனடைந்துள்ளனா். இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட புகாரை முறையாக விசாரிக்காமல், முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாரை அதிகாரிகள் நிராகரித்துள்ளனா். எனவே, மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா், தூத்துக்குடி ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (09.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (09.05.2026) - தனுசு
இன்றைய ராசி பலன் (09.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (09.05.2026) - கும்பம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
