அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 7:37 am IST

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞா்களை அவதூறாக பேசி வருவதாகவும், உசிலம்பட்டி மற்றும் செக்கானூரணி காவல்நிலையங்களில் 2 வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் வீரபிரபாகரன் தலைமை வகித்தாா். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக வந்து உசிலம்பட்டி தேவா்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் கோஷம் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.