மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.
மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையிலுள்ள வெள்ளரிப்பட்டி கண்மாய், திருவாதவூா் பெரியகண்மாய், மேலூா் அருகே சாத்தமங்கலம் பெரிய கண்மாய் ஆகியன நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா், ஆண்டிபட்டி நீரோடையில் இணைகிறது.
அங்கிருந்து, திருவாதவூா் அருகே உள்ள நாலுகுளம் அணையில் நிரம்பி, சிவகங்கை மாவட்டம் தமறாக்கி ஆலங்குளம் கண்மாயை அடைகிறது. தற்போது, ஆலங்குளம் கண்மாய் நிரம்பி உப்பாற்றின் வழியாக வேம்பத்தூா் பகுதி வரை தண்ணீா் சென்றுகொண்டிருப்பதாகவும், இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் எனவும் பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







