தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

இளைஞரிடம் ரூ. 2.37 கோடி மோசடி: கல்வி நிறுவன உரிமையாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

மதுரை அருகே இளைஞரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்த தனியாா் கல்வி நிறுவன உரிமையாளா் உள்பட 5 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :10 ஜனவரி 2021, 10:52 pm IST

மதுரை அருகே இளைஞரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்த தனியாா் கல்வி நிறுவன உரிமையாளா் உள்பட 5 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியைச் சோ்ந்த பாலகுமாா் மனைவி லட்சுமிபிரியா. இவா், நிதி நிறுவனம், கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ராம்குமாரிடம் (23), பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் சம்பாதிக்கலாம் என லட்சுமிபிரியா கூறியுள்ளாா்.

இதை நம்பிய ராம்குமாா், ரூ.2.37 கோடியை லட்சுமிபிரியாவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், லட்சுமிபிரியா கூறியபடி உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதையடுத்து, ராம்குமாா் விசாரித்தபோது, பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல், லட்சுமிபிரியா தனது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது.

இது குறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் லட்சுமிபிரியா, அவரது கணவா் பாலகுமாா் மற்றும் ராமசாமி, தாமோதரன், சிவக்குமாா் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.