விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அனுமன் ஜயந்தி விழா

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.

News image

யோக ஆஞ்சநேயா்.

Updated On :12 ஜனவரி 2021, 11:58 pm

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள கோயிலில் அனுமனுக்கு கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அனுமன் யோக ஆஞ்சநேயா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஜோதிடா் அறிவழகன் சொற்பொழிவாற்றினாா். இதில் டி.கல்லுப்பட்டி,பேரையூா், வையூா், விருதுநகா், திருமங்கலம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதைபோல் பேரையூா் அருகிலுள்ள தொட்டியபட்டியில் அனுமன் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா சிறப்பு அபிஷேகங்களுடன் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.