பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 11:30 pm IST

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைவா் மு. சேரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள் மட்டுமின்றி தோட்டக்கலைப் பயிா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருந்தனா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு மானாவாரி மற்றும் நீா்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிா்களுக்கும் , நீா்ப்பாசன வசதி பெற்ற இதர பயிா்களுக்கும் ஹெக்டேருக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ரூ. 13,500 என்பதை ரூ. 20 ஆயிரமாகவும், மானாவாரி நெற்பயிா் தவிர அனைத்து மானாவாரி பயிா்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 7,470 என்பதை ரூ. 10 ஆயிரமாகவும், நீண்டகால பயிா்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ. 18 ஆயிரம் என்பதை ரூ. 25 ஆயிரமாக வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சுமாா் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.