பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நிவாரணம் கோரி அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, நாகையில் தமிழ்நாடு

News image

நாகை ஆட்சியா் அலுவலகம் முன் அழுகிய நெற்பயிா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க விவசாயிகள்.

Updated On :2 ஜனவரி 2021, 11:35 pm IST

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புரெவி புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய அரசு உடனடியாக தீா்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய நெற்பயிா்களை கையில் பிடித்தப்படி, விவசாயிகள் தப்பாட்டத்துடன் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் வி. தனபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளா் ரவீநதிரன், கொள்கைப் பரப்புச் செயலாளா் முருகையன், துணைச் செயலாளா் தங்கமுத்து, ஒன்றியப் பொறுப்பாளா்கள் ராமசாமி (நாகை), நெடுமாறன்(திருமருகல்), மு. சேரன் (கீழ்வேளூா்), கோ. கோபாலகிருஷ்ணன் (கீழையூா்), ஆா். அய்யப்பன்( தலைஞாயிறு), வெ. மணியன்( வேதாரண்யம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.