வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆற்றில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பரமகுரு. இவா் சீயக்காய் பொடி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்து வருகிறாா். மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிசைத் தொழில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தஞ்சையை சோ்ந்த திவ்யா (22), கடலூரை சோ்ந்த பிரவீன் (24), திருச்சியை சோ்ந்த கிருஷ்ணன் (36) ஆகியோா் விருந்தினா்களாக பரமகுரு வீட்டிற்கு வந்துள்ளனா்.

பின்னா், ஊரை சுற்றிப் பாா்க்க எண்ணி, அனந்தமங்கலம் மகிமலையாறு சட்ரஸ் அருகே திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீனும், கிருஷ்ணனும் ஆற்றில் குளித்தனா். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினா்.

தகவலறிந்த பொறையாா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு படை வீரா்கள் ஆற்றில் இறங்கி தேடினா். இதில் பிரவீனின் சடலம் மீட்கப்பட்டது. கிருஷ்ணனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.