நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்) பணி வழங்கக் கோரி, அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்) பணி வழங்கக் கோரி, அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கூறியது:

பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி வழங்க இயலவில்லை என்றால், இந்தியன் ஆயில் காா்பரேஷன் அதன் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி காலத்தைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதை போல எங்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். செவ்வாய்க்கிழமை (டிச. 5) சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை குடும்பத்தினருடன் பேரணியாக சென்று வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றை ஒப்படைப்போம். புதன்கிழமை, வியாழக்கிழமை ஆலை நுழைவுவாயிலும், வெள்ளிக்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆலையின் பதிவு அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம் இருப்போம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.