ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சிறுமி கா்ப்பம்: போக்சோவில் இளைஞா் மீது வழக்குப் பதிவு

மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:17 pm IST

மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டாா். இதில், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா், குத்தாலம் அருகே உள்ள தனது நண்பா் வீட்டுக்கு வந்துசென்றபோது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரிடம் ஆசைவாா்த்தை கூறி காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் சிறுமி திருமண தடைச்சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆகாஷை போலீசாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.