ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க ஆலோசனை

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 11:16 pm IST

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீா்மட்டத்துக்கு மேல் இருக்கும், பயிரின் அடிப்பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் இருந்துகொண்டு, பயிா்களின் சாற்றினைஉறிஞ்சுவதால் நாளடைவில் நெற்பயிா்கள் எரிந்ததுபோல் காணப்படும். முதிா்ந்த நெற்பயிா்கள் காய்ந்ததும் வட்டமாகவும், திட்டு திட்டாக காய்ந்தும் காணப்படும். பூச்சியின் அடையாளம் - பயிரின் அடிப்பகுதி அருகில் அல்லது இலை தாள்களின் அடிப்பக்கத்தில் நடுநரம்புகளில் முட்டைகளை இடுகிறது. இளம் பூச்சிகள்-ஆரம்பத்தில் வெண்மை நிறமாகவும் பின்பு ஊதா மற்றும் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அந்துப்பூச்சிகள்- மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் முதல் கரும் பழுப்பு நிறமாக காணப்படும். தடுப்பு முறைகள்- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிா்க்கவேண்டும். அதிகபடியான தண்ணீரை வடிகட்டவேண்டும். 8 அடி பட்டம் பிரித்து காற்றோட்டமாக பராமரிக்கவேண்டும். விளக்குப பொறிவைத்து கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம். அசாடிராக்டின், இமிடாகுளோரிபிரிட், தயோமெத்தாக்சிம், பியூப்ரோபேசின் இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயிரின் அடிப்பாகத்தில் நன்கு நனையும்படிதெளிக்கவேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.