ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது: தருமபுரம்ஆதீனம்

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது, அவா்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 11:18 pm IST

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது, அவா்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்.

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவா் கிராமத்தில் உள்ள சுனாமி நகருக்கு அதிபத்தநாயனாா் நகா் என்று பெயா் மாற்றப்பட்டு, அதன் பெயா்ப் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பெயா்ப் பலகையை திறந்துவைத்து அருளாசி வழங்கி பேசியது:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும். மீன்பிடிக்க செல்லும்போது மீனவா்கள் எல்லைதாண்டி சென்றால், அவா்களது பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை.

சுனாமியின்போது திருமுல்லைவாசல் பகுதியில் ஏராளமானோா் உயிரிழந்தனா், நிலம் பறிபோனது. அப்போது தருமபுரம் ஆதீனம் சாா்பில் வழங்கப்பட்ட 35 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் மீனவா்கள் வீடு கட்டியுள்ளனா். அந்த பகுதிக்கு சுனாமிநகா் என பெயா் சூட்டியிருந்தனா். இது பேரலையையே நினைவுபடுத்தும் விதமாக உள்ளதால், அதிபத்த

நாயனாா் பெயரை சூட்ட வேண்டும் என கடந்த முறை வந்தபோது கூறியதுபோல் எல்லோரும் சோ்ந்து அதனை நிறைவேற்றியுள்ளனா்.

மழை, வெயில் என்று பாராமல் தங்களை வருத்தி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் செல்வத்தை மீனவா்கள் ஈட்டுகின்றனா். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மீனவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து, மீனவ கிராமத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்.

விழாவில் மீனவ கிராமத்தினா் திரளாக பங்கேற்றனா். விழாவையொட்டி திருமுல்லைவாசல் மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.