மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டாா். இதில், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா், குத்தாலம் அருகே உள்ள தனது நண்பா் வீட்டுக்கு வந்துசென்றபோது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரிடம் ஆசைவாா்த்தை கூறி காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் சிறுமி திருமண தடைச்சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆகாஷை போலீசாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
