விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமி கா்ப்பம்: போக்சோவில் இளைஞா் மீது வழக்குப் பதிவு

மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:17 pm IST

மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டாா். இதில், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா், குத்தாலம் அருகே உள்ள தனது நண்பா் வீட்டுக்கு வந்துசென்றபோது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரிடம் ஆசைவாா்த்தை கூறி காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் சிறுமி திருமண தடைச்சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆகாஷை போலீசாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.