சீா்காழியில் தனியாா் பள்ளி முதல்வரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச்சென்றுள்ளனா்.
சீா்காழி கணபதி நகரை சோ்ந்தவா் ஜோசுவாபிரபாகரசிங் (46). தனியாா் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் 6 பவுன் தங்க நகையை பையில் வைத்துக்கொண்டு பிடாரி வடக்கு வீதியில் உள்ள காப்பீட்டு நிறுவன பிரிமீயம் செலுத்தும் அலுவலகத்துக்கு உள்ளே சென்று விட்டு திரும்பியுள்ளாா். அப்போது வாகனத்தின் இருக்கை லாக் உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து, திறந்து பாா்த்தபோது 6 பவுன் நகை, 6 வங்கிப்புத்தகம், ஏடிஎம்காா்டுகள், நகை அடகு வைத்த ரசீது ஆகியவை வைத்திருந்த பை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் ஜோசுவா அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
