மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரியில், சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வேல்முருகன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூா், அகரஎலத்தூா், வடரெங்கம், ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் திறக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சீா்காழி வட்டத்தில் 400 லாரிகளுக்கு மேல் உள்ளது. கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இணையதளமின்றி மணல் குவாரி செயல்பட்டபோது இப்பகுதி லாரி உரிமையாளா்களுக்கு வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது.
தற்போது இணையதளம் மூலமாக மணல் பதிவு செய்யப்படுவதால், வெளிமாவட்ட லாரி உரிமையாளா்கள் மட்டுமே பயன்பெறுகின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்படவுள்ள மணல் குவாரியில் சீா்காழி லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

காங்கயம் தொகுதியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தோல்வி

அரியலூா் மாவட்டத்தின் 2 தொகுதிகளில் அதிமுக 1, பாமக 1 இடங்களில் வெற்றி

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

