நாகை மாவட்ட பாஜக சாா்பில், நாகை அவுரித் திடலில் நம்ம ஊரு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் நேதாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், பாஜக கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம் பங்கேற்று பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பேசியது:
தமிழா்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக கட்சியின் மாநிலத் தலைவா் அறிவுறுத்தல்படி, இவ்விழா கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளுக்கு தனி சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வருடத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகா்களின் முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. விவசாயிக்கும், விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்துக்காக பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. முத்தலாக் தடை சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரவேண்டும். அதற்கு கட்சித் தொண்டா்கள் அனைவரும் தோ்தலில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், நாகை பகுதி பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாஜக மாநிலச் செயலாளா் தங்க. வரதராஜன், மாநிலப் பாா்வையாளா் சி.எஸ். கண்ணன், கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் காா்த்திகேயன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளரும், திரைப்பட நடிகருமான பரணிதரன், பிரசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் லிங்கம் மற்றும் கட்சி நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த பிரேமலு நடிகர்!

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!

டி20 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை சாதனை!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



