நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
நாகை வட்டம், பில்லாளி அருகே உள்ள காரையூா் ஊராட்சி உச்சிக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் கா. ஆனந்தன் (40). விவசாயியான இவா், திங்கள்கிழமை காலை கையில் பெட்ரோல் கேனுடன் நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிக்க உள்ளதாக அங்குள்ள ஊழியா்களிடம் தெரிவித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள், பெட்ரோல் கேனை பறித்து, ஆனந்தனை அமைதிப்படுத்தினா். பிறகு, அவரிடம் விசாரித்தபோது, தனக்குச் சொந்தமான 4 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், 3 ஏக்கரில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வெள்ள நிவாரணக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அவரது உதவியாளா்களே காரணம் எனவும் தெரிவித்த ஆனந்தன், இதைக் கண்டித்தே தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா் வெளிப்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
கேன்ஸ்-ல் திரையிடப்படும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

