கீழையூா் கடைத் தெரு பகுதியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் கீழ்வேளூா் முன்னாள் தொகுதி செயலாளருமான எஸ். பால்ராஜ் தலைமை வகித்தாா். அதிமுக கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளரும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் பங்கேற்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்வில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா, ஒன்றியக் குழு உறுப்பினா் எல். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!





