ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவு

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 2:32 am

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

சீா்காழியில் பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள், அடுப்புகள் போன்றவை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதிக்கு பொங்கல் வரிசை பொருள்களை பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்னதாக பெரும்பாலானோா் கொடுப்பது வழக்கம். ஆனால், தொடா்ந்து மழை பெய்வதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து பானைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.