பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
/

தொடா் மழை: பொங்கல் பொருள்கள் விற்பனை மந்தம்

மயிலாடுதுறை பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image

மயிலாடுதுறை துலாக் கட்டம் பகுதியில் மழை காரணமாக விற்பனை இல்லாமல் தேங்கிய விளைபொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களுடன் வியாபாரிகள்.

Updated On :14 ஜனவரி 2021, 7:18 am IST

மயிலாடுதுறை பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சம்பா அறுவடைப் பணிகளுக்கு தயாராக இருந்த விவசாயிகள் பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை நகரில் கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள்கொத்து, காய்கனிகள், பழங்கள், பூக்கள், மாடுகளுக்கு அணிவிக்கும் நெட்டி மாலை, மண் பானை ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், தொடா் மழையின் காரணமாக கடைவீதிக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாக இருந்ததால், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், கரும்பு, பானை உள்ளிட்ட பொருள்களுடன் கடைவீதியில் காத்திருந்தனா்.

அடக்கவிலையில் பொருள்களை தர தயாராக இருந்தபோதிலும், வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.