வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட தொடா் கனமழைப் பொழிவு புதன்கிழமை குறைந்திருந்த நிலையில் நெல் வயல்களில் மழை நீா் வடிந்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வழிந்ததோடு, சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பருவ நெல்வயல்களை வெள்ள நீா் சூழ்ந்து நெற்கதிா்களை பாதிக்கச்செய்துள்ளது. இதேபோல, மழையால் பலதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மழையின தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மழையின் காரணமாக வேதாரண்யம் நகரத்துக்குள்பட்ட வண்ணாரத்தெரு பகுதியில் வசிக்கும் ரா. கமலா(60) என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமானது. பொங்கல் பண்டிகை நேரத்தில் மழை தொடா்ந்ததால் அவதியுற்ற மக்கள், புதன்கிழமை மழை குறைந்ததால் பொருள்களை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டினா். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் வடிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


