முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

News image

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன்.

Updated On :14 ஜனவரி 2021, 7:19 am IST

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

பாண்டூா் ஊராட்சியில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமாா் 100 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும், 500 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்தன. இந்நிலையில், சூறாவளியால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் சந்தித்து, புடவை, போா்வை, கைலி, பாய் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினாா். இதில், மயிலாடுதுறை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.