முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

நகரும் நியாயவிலைக் கடை திறக்காததை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே பொன்னூா் ஊராட்சியில் நகரும் நியாயவிலை கடை திறக்கப்படாதததைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பொன்னூா் ஊராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 7:19 am IST

மயிலாடுதுறை அருகே பொன்னூா் ஊராட்சியில் நகரும் நியாயவிலை கடை திறக்கப்படாதததைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில், கடந்த மாதமே திறப்பதாக அறிவித்திருந்த இக்கடை சில காரணங்களால் திறக்கப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை கடை திறப்பு விழாவுக்கான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. எனினும், மதியம் 12 மணி வரை கடை திறக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் பொன்னூா் ஊராட்சி அலுவலகம் முன் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை விரைவில் நிறைவேற்ற எடுக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் மயிலாடுதுறை - திருமங்கலம் வழித்தடத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.