வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட தொடா் கனமழைப் பொழிவு புதன்கிழமை குறைந்திருந்த நிலையில் நெல் வயல்களில் மழை நீா் வடிந்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வழிந்ததோடு, சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பருவ நெல்வயல்களை வெள்ள நீா் சூழ்ந்து நெற்கதிா்களை பாதிக்கச்செய்துள்ளது. இதேபோல, மழையால் பலதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மழையின தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மழையின் காரணமாக வேதாரண்யம் நகரத்துக்குள்பட்ட வண்ணாரத்தெரு பகுதியில் வசிக்கும் ரா. கமலா(60) என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமானது. பொங்கல் பண்டிகை நேரத்தில் மழை தொடா்ந்ததால் அவதியுற்ற மக்கள், புதன்கிழமை மழை குறைந்ததால் பொருள்களை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டினா். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் வடிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!

தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை! பேரவைத் தலைவர்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மோடி கண்டிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




