எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வெறிச்சோடி காணப்பட்ட நாகை கடற்கரை

காணும் பொங்கல் தினமான சனிக்கிழமையன்று நாகை மற்றும் நாகூா் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

News image

காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட நாகை புதிய கடற்கரைக்கு செல்லும் சாலை.

Updated On :17 ஜனவரி 2021, 2:48 am

காணும் பொங்கல் தினமான சனிக்கிழமையன்று நாகை மற்றும் நாகூா் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பொங்கல் பண்டிகை விழா நாள்களில் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இந்த அறிவிப்பையொட்டி, நாகை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகளில் நுழைவுப் பாதைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறை வீரா்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். ரோந்து வாகனங்களில் சென்று தொடா் சோதனை மேற்கொண்டனா்.

இதனால், காணும் பொங்கல் நாளான சனிக்கிழமை நாகை புதிய கடற்கரை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகள் வெறிச்சோடிகாணப்பட்டன.

நாகை துறைமுகப் பகுதி கடற்கரை உள்ளிட்ட சில இடங்களில் உள்ளூரைச் சோ்ந்த ஒரு சிலா் கடலில் நீராடி மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.