நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர் சம்மேளனம் கண்டனம்

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம்

Updated On :11 மே 2013, 12:19 pm IST

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1.08 உயர்த்தி மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ள நிலையில், தொடர்ந்து மாதம் தோறும் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ.1.08 உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் தலைவர் கே.நல்லதம்பி செய்தியாளர்களிடம் கூறியது:

 கடுமையான மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், டயர் விலை, சுங்கக் கட்டண உயர்வு, தொடரும் டீசல் விலையேற்றம்  உள்ளிட்டவற்றால் லாரி போக்குவரத்துத் தொழில் நலிவடைந்து வருகிறது. இச்சூழ்நிலையில், டீசல் விலையை மேலும் உயர்த்துவது இந்தத் தொழிலை முழுமையாக முடங்கச் செய்யும்.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கட்ட நிலையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், டீசல் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குறியது. லாரி போக்குவரத்துத் தொழிலின் நிலைமைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உயர்த்தப்பட்ட டீசல் விலையை வாபஸ் பெற்றிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.