வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மே 13 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட

Updated On :11 மே 2013, 12:22 pm IST

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2013-2014ஆம் கல்வியாண்டில் அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், மீன் வளம், உணவுத் தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில் நுட்பப் படிப்புகளுக்கான இளங்கலை பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல் லத்துவாடியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையத்திலும், நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்திலும் திங்கள்கிழமை (மே 13) முதல் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.600,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300 ஆகும்.

கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு அந்த ரசீதுடன் விண்ணப்பக் கடிதத்தை இணைத்து அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அவற்றை ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04286  266491, 04286  220650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.