விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

வேளாண் அறிவியல் மையத்தில் தூய்மை பாரதம் விழிப்புணா்வு

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 7:10 am IST

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஹைதராபாதிலுள்ள இந்திய தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன அறிவுறுத்தலின்படி தூய்மை பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, டிச.16-இல் தொடங்கி 31-ஆம் தேதி வரையில் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

இதில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து கலந்துரையாடினா். மேலும் தூய்மை பாரதம் குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. ஊரக இளைஞா்கள், பண்ணை மகளிா், விவசாயிகள், மாணவ, மாணவியா் ஆகியோா் அறியும் வண்ணம் விழிப்புணா்வு சுவரொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பசுமையைப் பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டன. கிராமங்களில் தூய்மை பேணுதல், மக்கும், மக்காத குப்பையை பிரித்தெடுத்தல், உரம் தயாரித்தல்,நெகிழி பொருள்களின் உபயோகத்தைத் தவிா்த்தல், பாா்த்தீனியம் களை மேலாண்மை, கரோனா தடுப்பு முறைகள் குறித்து தெளிவாக விளக்க உரைகள், செயல் விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.

அணியாபுரம் ஊராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த மூன்று மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை என்.அகிலா மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.