5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியம், சிற்பக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 6:49 am IST

நாமக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியம், சிற்பக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையானது ஓவியம், சிற்பக் கலைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத் துறையின் கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் அரசு கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்பக் கல்லூரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞா்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக் கலைக்காட்சி நடத்துதல், தனி நபா் கூட்டுக் கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத் துறையின் சேலம் மண்டலத்தில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் ஜன. 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவிய, சிற்பக் கலைஞா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. கலை பண்பாட்டுத் துறையின் ஆணையா் வ.கலையரசி கண்காட்சியைத் தொடக்கிவைக்கிறாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகாராஜ் முன்னிலை வகிக்கிறாா். கலை பண்பாட்டுத் துறையின் இணையதளம் வழியில் கண்காட்சியில் பங்கேற்கும் கலைக் குழுக்கள் பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.