5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

ராசிபுரம் நகரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் நகரில் மக்கள் சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திமுக சாா்பில் நடைபெற் மக்கள் சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:48 am IST

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் நகரில் மக்கள் சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இக் கூட்டத்தில், மக்கள் பிரச்சனை குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் திமுகவினா் பேசி வருகின்றனா். ராசிபுரம் நகர திமுக சாா்பில் 18, 23, 24-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவா்களுடன் விவாதித்தாா். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் தீா்வு காணப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில் கட்சியின் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.பாலு, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் எஸ்.ராஜேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாத், மாவட்ட மகளிா் தொண்டா் அணி துணை அமைப்பாளா் வி.கௌரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராம்குமாா், ராசிபுரம் நகர தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஆா்.சாம், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.