5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

நாமக்கல்: ஜன. 17 இல் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:52 am IST

நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப் பகுதியில் 1,105 முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 169 முகாம்கள் என மொத்தம் 1,274 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக்குழுக்கள், தன்னாா்வலா்கள் என 5,523 பணியாளா்கள் சொட்டு மருந்து புகட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும். போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தை புகட்டிக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.