குமாரபாளையம்: குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை ஊராட்சியில் காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா் திட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசன் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். இத் திட்டம் மூலம், கிராமங்களில் குற்றங்களைத் தடுத்தல், வதந்திகள், அசம்பாவிதங்களைத் தடுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை கிராம கண்காணிப்பு காவல் அலுவலா் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். இதில் கிராமத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகா்களும் ஒருங்கிணைக்கப்படுவா்.
குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தேவி, தட்டாங்குட்டை ஊராட்சித் தலைவா் புஷ்பா செல்லமுத்து, வாா்டு உறுப்பினா்கள் ஜான் பீட்டா், அமுதா, ராமச்சந்திரன், முனியப்பன், ராஜா, செந்தாமரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


