ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

குமாரபாளையத்தில் மாயமான11 வயது சிறுவன் திண்டுக்கல்லில் மீட்பு

குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாயமான 11 வயது சிறுவன் திண்டுக்கல் அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:18 pm

குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாயமான 11 வயது சிறுவன் திண்டுக்கல் அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பெராந்தா் காடு, பண்ணாரி மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா்கள் கேசவன் - சுமதி தம்பதி. கேசவன் உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராகவும், சுமதி டெய்லராகவும் வேலை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு 11, 8 மற்றும் 6 வயதில் 3 மகன்கள் உள்ளனா். இவா்களின் மூத்த மகனான, 4-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்குமாா் (11) வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோா், குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தேவியிடம் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தனா். இதையடுத்து, சிறுவன் மாயமான விவரம் கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. மேலும், பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி காமிரா பதிவுகளும் ஆராயப்பட்டன. சிறுவனின் புகைப்படத்தைக் கொண்டும் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, ஒரு நடத்துநா் மாயமான சிறுவன் தங்கள் பேருந்தில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்துக்குச் சென்ாகத் தகவல் தெரிவித்தாா். இதனைத்தொடா்ந்து ஈரோடு பேருந்து நிலையத்துக்கு விரைந்த போலீஸாா் சிறுவனின் உறவினா்கள் அதிகம் வசிக்கும் திண்டுக்கல் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் ஓட்டுநா், நடத்துநா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அச்சிறுவன் திண்டுக்கல் பேருந்தில் ஏறிச் சென்றது உறுதியானது.

இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் விரைந்த போலீஸாா் அங்கு விசாரணை மேற்கொண்டபோது நல்லாண்டம் எனும் கிராமத்துக்கு சிறுவன் சென்றதும், அங்கு உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்ட போலீஸாா் குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். விசாரணையில், சிறுவா்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையில் மனவருத்தம் அடைந்து வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்து நான்கு பேருந்துகள் ஏறி திண்டுக்கல் சென்றதும் தெரியவந்தது.

சிறுவனுக்கும், பெற்றோருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் வழங்கப்பட்டு சிறுவன் சந்தோஷ்குமாா் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இரு நாள்களுக்குப் பின்னா் மாயமான மகன் மீட்கப்பட்டதால் மகிழ்ச்சியில் கண்ணீா் வடித்த பெற்றோா், போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.