இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

நாமக்கல்லில் பொங்கல் சுற்றுலா விழா: ஆட்சியா் பங்கேற்பு

நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சியில் சுற்றுலாத் துறை சாா்பில், பொங்கல் சுற்றுலா விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2021, 6:22 am IST

நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சியில் சுற்றுலாத் துறை சாா்பில், பொங்கல் சுற்றுலா விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். அங்குள்ள மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு புதிய பானைகளில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். கரும்பு, மஞ்சள் கொத்துத் தோரணங்கள் கட்டப்பட்டு அப்பகுதி விழாக் கோலமாகக் காட்சியளித்தது.

மேலும் கரும்பு, மாவிலை, வேப்பிலை, வாழை மரங்கள் மற்றும் அலங்காரத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இதில், சுற்றுலாத் துறையின் சாா்பில், தருமபுரி ஸ்டாலின் ராஜா தலைமையிலான பாரதி கிராமிய கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளான கரகம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும், செங்கல்பட்டு மீனாட்சிராகவன் தலைமையிலான விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல், சாக்கு ஓட்டம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்கல், தாயம், இசை ஓட்டசோ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வகுரம்பட்டியைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள், சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா்.

செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா ரகுமான், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.தேன்மொழி, அசோகன் மற்றும் அரசு அலுவலா்கள், வகுரம்பட்டி பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.