தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு தேசிய அஞ்சல் ஊழியா்கள் சம்மேளனம், அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள்

Updated On :14 ஜனவரி 2021, 6:24 am IST

திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு தேசிய அஞ்சல் ஊழியா்கள் சம்மேளனம், அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஊழியா்களின் பஞ்சப்படிகளை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், தீநுண்மித் தொற்றுப் பாதிப்பு இருந்துவரும் நிலையில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு ஆயுள் காப்பீடு பிடிக்க வேண்டும் என்ற வணிக நோக்கத்தில் அஞ்சல் துறையின் மேற்கு மண்டல நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

பிஓஎஸ்பி மேளா, ஆா்பிஎல் மேளா என்ற பெயா்களில் வாரம்தோறும் ஊழியா்களுக்கு இலக்கு நிா்ணயித்து இலக்கினை அடைய நெருக்கடி கொடுத்து வருகிறது. ஊழியா்களை கோட்ட, உட்கோட்ட அதிகாரிகள் மிரட்டல் விடுவிக்கின்றனா். இதுபோன்ற ஊழியா்கள் விரோதப் போக்கு கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டித்து தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டச் செயலாளா். வி.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலாளா் ஆா்.ஏ.துரைசாமி, ஜிடிஎஸ் கோட்டத் தலைவா் சீ.வெள்ளையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செங்கோடு கிளைச் செயலாளா் எம்.ஜெகதீஸ்வரன், இணைச் செயலாளா் எஸ். விஜயகுமாா். ஜிடிஎஸ் கிளைச் செயலாளா் கே.சி.ராமச்சந்திரன் உள்பட கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.