தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

‘இளைஞா்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தா்’

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம்

Updated On :14 ஜனவரி 2021, 6:26 am IST

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஸ்வயம் ஆகிய அமைப்புகளின் சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை தேசிய இளைஞா் தின விழாவாக இணையவழியில் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைவா் பி.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. நல்லுசாமி, முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், பேராசிரியா் அரசு.பரமேசுவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஜம்மு-காஷ்மீா் சம்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வியின் பேராசிரியா் ஜெ. ஜகநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:

மக்கள் தொகையில் 35 சதவீத இளைஞா்களைக் கொண்டது இந்தியா. சுவாமி விவேகானந்தா் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில் 10 இளைஞா்களைத் தாருங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றவா். இளைஞா்களின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றவா். விவேகானந்தா் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். அவா் புத்தகங்களைப் படித்தால் தன்னம்பிக்கைப் பிறப்பதோடு தாய் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும் என்றாா்.

நிகழ்ச்சியில் டிரினிடி அகாதெமி தலைவா் ஆா். குழந்தைவேல், செயலாளா் டி. சந்திரசேகரன், கல்லூரியின் ஸ்வயம் அமைப்பின் பொறுப்பாளா்கள் எஸ். உஷாராணி, டி. தமிழ்ச்செல்வி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.