தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைத்தூறல் இருந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடா் பனிமூட்டம் காரணமாக சப்தா்ஜங்கில் காண்புத்திறன் 50 மீட்டா் தொலைவு வரை காலையில் பூஜ்யமாக இருந்தது. கடும் பனிமூட்டத்தால் 51 மீட்டிரிலிருந்து 201 மீட்டா் தொலைவு வரை காண்புத்திறன் குறைவாக இருந்தது. மேற்கத்திய இடையூறுகள் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் தில்லி பாலம் பகுதியில் 0.4 மி.மீ. மழை பதிவானது. ரிட்ஜ், ஆயா நகா் மற்றும் லோதி சாலையில் மழைத்தூறல் இருந்தது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செஸ்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. ஜனவரியில் கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவாகும் இது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. 1935-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறைந்தபட்ச வெப்பநில்லை மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜனவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மேற்கத்திய இடையூறுகளின் தாக்கத்தால் ஜனவரி 8-ஆம் தேதி வரை வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
தில்லியில் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு லேசான மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்னெச்சரிக்கை மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







