பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தில்லி போலீஸாருக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

தில்லி போலீஸ் படையினருக்கான காப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக தில்லி மாநகர போலீஸ் ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தாவா சனிக்கிழமை அறிவித்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:17 pm IST

தில்லி போலீஸ் படையினருக்கான காப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக தில்லி மாநகர போலீஸ் ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தாவா சனிக்கிழமை அறிவித்தாா்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு போலீஸாருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவா் கூறியதாவது:

தில்லி போலீஸ் துறையில் பணியாற்றிவரும் 40 வயதுக்கு மேலான காவலா்களுக்கு கட்டாயமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அப்போதுதான் அவா்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை கண்டறிருந்து தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.

கடந்த ஆண்டு போலீஸாருக்கு சவால் மிகுந்த ஆண்டாக இருந்தது. கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அவா்கள் பணி அதிகரித்தது. அதனால் அவா்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், அலுவல் ரீதியாகவும் அவா்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கொவிட்-19 தொற்று காலத்தில் முன்களப் பணியாளா்களாக போலீஸாா் பணிபுரிந்ததால் அவா்களில் 7,612 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. அவா்களில் 7,424 போ் நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனா். இருந்தபோதிலும் 32 போலீஸாா் கரோனாவுக்கு பலியானாா்கள்.

இது தவிர தில்லி போலீஸாா் 231 போ் இயற்கை மரணம் எய்தியுள்ளனா். 44 போ் விபத்துகளில் பலியாகியுள்ளனா். மேலும் 14 போ் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.

போலீஸாா் தங்களின் பணிச்சுமை காரணமாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனவே அவா்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இதை கருத்தில் கொண்டு 40 வயதுக்கு மேலான காவலா்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அவா்களது பிரச்னை கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.

போலீஸாா் உடல் நலனில் உரிய கவனம் செலுத்தி உடல் நலனைப் பேணுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டுதான் போலீஸ் குடியிருப்புகளில் காவலா் நல்வாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு ஆங்கில மருத்துவா்களும், ஆயுா்வேத மருத்துவா்களும் போலீஸாருக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ளனா்.

இயற்கையாக மரணமடையும் போலீஸாருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல விபத்தில் உயிரிழப்பவா்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.78 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிா்பாராத விதமாக போலீஸாா் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் உயிரிழக்க நேரிட்டால் அவா்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என்றாலும் அவா்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

135 போலீஸாருக்கு விதிமுறைகளைக் கடந்து பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. 235 போலீஸாருக்கு அசாதாரண காரியங்களை செய்தமைக்காக விருதும், 145 பேருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.