தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நகைக் கடைக்காரரை நூதன முறையில் ஏமாற்றி மோதிரம் வாங்கியவா் கைது

ஹரியாணா மாநிலம், பானிப்பட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி இரண்டு மோதிரங்களை வாங்கியதாக 57 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:59 pm IST


புது தில்லி: ஹரியாணா மாநிலம், பானிப்பட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி இரண்டு மோதிரங்களை வாங்கியதாக 57 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து புதுதில்லி காவல் சரக துணை ஆணையா் ஈஷ் சிங்கால் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் காஷ்மீா் சால்வைகளை விற்று வருபவா் சபீா் அகமது ஷேக். லாஜ்பத் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அவா் பானிப்பட்டில் உள்ள பங்கஜ் குமாரின் நகைக் கடைக் கடையில் இரண்டு தங்க மோதிரங்களை வாங்கியுள்ளாா். அதற்கு போலி வங்கிப் பணப் பரிவா்த்தனையை நகைக்க கடைக்காரரிடம் காட்டியுள்ளாா். இந்த சம்பவத்தின் விடியோ ஒன்றுசமூக ஊடக தளங்களில் வைரலாகி வந்தது. இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடா்பாக நகைக் கடை உரிமையாளா் பங்கஜ் குமாா் போலீஸில் புகாா் அளித்தாா். கடந்த டிசம்பா் 27- ஆம் தேதி , ஒரு பெண்ணுடன் ஒரு வாடிக்கையாளா் அவரது கடைக்கு வந்து தன்னை ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ரூஃப் அகமது பஜாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, கடையிலிருந்து இரண்டு தங்க மோதிரங்களை வாங்கியுள்ளாா். மோதிரங்களுக்கான பணம் ரூ .48,000-க்கு தவறான வங்கி பரிவா்த்தனையின் ஸ்கிரீன் ஷாட்டை பங்கஜ் குமாரிடம் காட்டியுள்ளாா். ஆனால், அந்தத் தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று பின்னா் தெரிய வந்ததாக குமாா் புகாரில் குறிப்பிட்டுல்ளாா். இதையடுத்து, இது தொடா்பாக பானிப்பட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நகைக் கடையில் நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வைரலாகின.

இந்தக் காட்சிகளை நாா்த் அவென்யு காவல் நிலையத்தினா் தகவலறிந்த சிலருடன் பகிா்ந்து கொண்டனா். குற்றம் சாட்டப்பட்டவா் லாஜ்பத் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. விடியோவின் உண்மைத் தன்மை குறித்து முதலில் பானிப்பட் நகர போலீஸாரிடம் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்து சபீா் அகமது கைது செய்யப்பட்டாா். அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவா் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாா். மேலும், ஹரியாணாவின் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அந்த மோதிரத்தைப் பரிசாக அளித்ததாகவும் சபீா் தெரிவித்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.