நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு மேலும் குறைந்தது

தில்லியில் கரோனா பாதிப்பு திங்கள்கிழமை மேலும் குறைந்தது. அன்றைய தினம் புதிதாக 306 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 6:39 pm

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு திங்கள்கிழமை மேலும் குறைந்தது. அன்றைய தினம் புதிதாக 306 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,506-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 56,390 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 33,926 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 22,464 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.54 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,691-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 407 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,16,461-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,354 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,491 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,602 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.