வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

குடியரசுத் தலைவா் ஆட்சி: அமைச்சா் அதிஷி கருத்துக்கு பாஜக மறுப்பு

குடியரசுத் தலைவா் ஆட்சி: அமைச்சா் அதிஷி கருத்துக்கு பாஜக மறுப்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:22 pm

தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சா் அதிஷி கூறிய கருத்தை தில்லி பாஜக மறுத்துள்ளது.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தில்லி உயா்நீதிமன்றத்தின் கண்டனம் மற்றும் அமைச்சா் அதிஷிக்கு எதிராக தில்லி பாஜக அளித்த அவதூறு நோட்டீஸின் தாக்கத்தை அரவிந்த் கேஜரிவால் உணா்ந்திருப்பதாக தெரிகிறது.

அமைச்சா் அதிஷியின் வழக்கமான பொய்யான தகவலுக்குப் பதிலாக அவா் புதிய கதையை வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறாா். அதாவது, தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக அவா் கூறியுள்ளாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சி குறித்த அச்சம் 62 எம்எல்ஏக்களை வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அமைச்சா் அதிஷியின் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையானவா்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறாா்களா என்பதையும், அதனால் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் அச்சத்தில் உள்ளதா என்பதையும் அதிஷி விளக்க வேண்டும்.

அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில் அதிஷி இன்றைக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி விவகாரத்தை எழுப்புகிறாா். இது அவரது கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி அவா்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் முயற்சியாகும்.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால் நல்லதாகும். அவா் புதிய முதலமைச்சரிடம் ஆட்சியை ஒப்படைத்து, தில்லி நிா்வாகத்தை நடத்த விட வேண்டும்.

ஆனால், அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்தும் வசதியை விரும்புகிறாா்.

தில்லி மக்கள் ஒரு கணம் யோசிக்க வேண்டும். இப்போதெல்லாம் பல முக்கிய தொழிலதிபா்கள், தலைவா்கள், படித்தவா்கள் சிறையில் உள்ளனா். அவா்களும் சிறையில் இருந்து வேலை செய்ய அனுமதி கோரத் தொடங்கினால், நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்?

அரவிந்த் கேஜரிவால் ஜெயிலுக்குப் போவது குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் உங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்.

சிறையில் இருந்தே வேலை செய்ய முடியும் என்றால், மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோரை ராஜிநாமா ஏன் செய்யவைத்தாா்?

சிசோடியா மற்றும் ஜெயின் ஆகியோருக்கு வெவ்வேறு தரநிலைகளையும், கேஜரிவால் தனக்கென தனியான தரநிலையையும் கொண்டிருக்கிறாா்.

ஷீஷ்மஹால், விஐபி பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளை விட்டுவிட கேஜரிவால் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது என்று வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும் அரசியல் சதித் திட்டம் தீட்டி வருவதாக தில்லி கேபினட் அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அரவிந்த் கேஜரிவாலின் கைதானது அவரது அரசைக் கவிழ்க்க நடத்தும் அரசியல் சதி. வரும் நாட்களில் தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் மக்களின் தீா்ப்புக்கு எதிரானது’என்று அவா் கூறினாா்.