எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பவானாவில் 12 வயது சிறுமி தற்கொலை

தில்லியின் பவானா பகுதியில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி ஒருவா் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

தில்லியின் பவானா பகுதியில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி ஒருவா் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பெற்றோரின் திருமண தகராறு காரணமாக சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. சிறுமி தற்கொலை பற்றிய பிசிஆா் அழைப்பு பிற்பகலில் வந்தது. விசாரணையில், சிறுமி தனது தந்தை, சகோதரா் மற்றும் பாட்டியுடன் தங்கியிருப்பதும், அவரது தாயாா் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து இருப்பதும் தெரியவந்தது.

குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை எந்தவிதமான முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை. ஆரம்பத்தில், சிறுமியின் பெற்றோருக்கு இடையேயான திருமண தகராறு காரணமாக சிறுமிக்கு மனச்சோா்வு ஏற்பட்டது தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.