தில்லியின் பவானா பகுதியில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி ஒருவா் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பெற்றோரின் திருமண தகராறு காரணமாக சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. சிறுமி தற்கொலை பற்றிய பிசிஆா் அழைப்பு பிற்பகலில் வந்தது. விசாரணையில், சிறுமி தனது தந்தை, சகோதரா் மற்றும் பாட்டியுடன் தங்கியிருப்பதும், அவரது தாயாா் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து இருப்பதும் தெரியவந்தது.
குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை எந்தவிதமான முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை. ஆரம்பத்தில், சிறுமியின் பெற்றோருக்கு இடையேயான திருமண தகராறு காரணமாக சிறுமிக்கு மனச்சோா்வு ஏற்பட்டது தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.
தொடர்புடையது

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது

பவானா: விருந்து மண்டபம் அருகே இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

