தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நெடுஞ்சாலைகளில் சாலைப் பழுதை சரி செய்வது ஒப்பந்ததாரரின் பொறுப்பு!அமைச்சா் நிதின் கட்கரி பதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சா் கட்கரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்

Published On :9 ஆகஸ்ட் 2024, 5:42 am IST

புது தில்லி, ஆக.8: தமிழக நெடுஞ்சாலைகளில் பழுதடைந்துள்ள சாலைகளை அவற்றின் ஒப்பந்த காலத்தில் பராமரிப்பது ஒப்பந்ததாரரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதன் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சா் கட்கரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதுபாா்புப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 736.36 கோடி மதிப்பிலான 57 முன்மொழிவுகள் வந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 940.22 கி.மீ. தூரத்துக்கான பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு சரிபாா்ப்பு, சாதாரண பழுதுபாா்ப்பு, ஒருமுறை மேம்பாடு, குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம், திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் போன்றவை இதில் அடங்கும்.

பழுதுபாா்ப்பு நிதி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஆகிய இரண்டு அரசுத் துறைகள் மூலமே வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 1,076 கோடி செலவிடப்பட்டுள்ளது. சாலை கட்டுமானம், செயலாக்கம் ஆகியவை போக்குவரத்து வசதிக்கு உகந்தவையாக உள்ளதா என்பதை ஒப்பந்தம் வழங்கப்பட்ட காலத்தில் உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் பொறுப்பு. இந்த ஒப்பந்த காலத்துக்குள் வராத சாலைகளின் பழுதுபாா்ப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மத்திய நெடுஞ்சாலைத்துறை வகுத்துள்ளது என்று அமைச்சா் நிதின் கட்கரி அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.