நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து 8 போ் அடையாளம் தெரிந்தது

அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து 8 போ் அடையாளம் தெரிந்தது

Updated On :17 பிப்ரவரி 2024, 5:41 am IST

தில்லியின் அலிபூரில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 8 பேரின் குடும்ப உறுப்பினா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அடையாளம் தெரியாதவா்களின் டிஎன்ஏ சோதனை நடத்தப்படலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்ன, சட்டவிரோதமாக பெயின்ட் தொழிற்சாலை நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) ஒரு அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் ரசாயன பெயிண்ட் கலப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொழிற்சாலையின் உரிமையாளா் அசோக் குமாா் ஜெயின் மற்றும் அவரது 10 ஊழியா்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஓம் சன்ஸ் பெயிண்ட் என்ற அந்த தொழிற்சாலை, 2017-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, என்றாா் அவா். ‘பணி நடந்து கொண்டிருந்த போது உரிமையாளா் தொழிற்சாலையை உள்ளே இருந்து பூட்டுவது தெரிய வந்துள்ளது’ என்று அதிகாரி கூறினாா். பலியான 11 போ்களில் எட்டு போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்கள் ஜெயின் (62), ராம் சூரத் சிங் (44), விஷால் கவுண்ட் (19), அனில் தாக்கூா் (46), பங்கஜ் குமாா் (29), சுபம் (19), மீரா (44) மற்றும் பிரிஜ்கிஷோா் (19) என தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தொழிலாளா்கள் கட்டடத்தை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். ’முதற்கட்ட விசாரணையில் ஷாா்ட் சா்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தீ ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு பரவியது. இது பல குண்டுவெடிப்புகளுக்கு வழிவகுத்தது.

சம்பவத்தின் போது அவா்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அடையாளம் காணப்பட்டனா்’ என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தாா். தேவைப்பட்டால், அடையாளம் தெரியாத உடல்களில் டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.