நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மின் திருட்டு வழக்குகளைத் தீா்ப்பதற்கு நாளை டிபிடிடிஎல்லின் லோக் அதாலத்

கடைசி பாராவில் ஆங்கில எழுத்துகள் உள்ளன. மின் திருட்டு வழக்குகளைத் தீா்ப்பதற்கு நாளை டிபிடிடிஎல்லின் லோக் அதாலத்

Updated On :17 பிப்ரவரி 2024, 5:42 am IST

மின் திருட்டு வழக்குகளை பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீா்வுக்கான மின்விநியோக நிறுவனமான டிபிடிடிஎல்லின் லோக் அதாலத் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) ரோகிணி செக்டாா் 13-இல் நடைபெறும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) வடக்கு தில்லியில் சுமாா் 70 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய பகுதிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) டிபிடிடிஎல் இணைந்து லோக் அதாலத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரோகிணி செக்டாா் 13-இல் உள்ள வெங்கடேஷ்வா் குளோபல் பள்ளிக்கு அருகில் நடத்துகிறது என்று அவா் கூறினாா். 19124 என்ற எண்ணையோ அல்லது அதிகாரப்பூா்வ மின்னஞ்சலையோ தொடா்புகொண்டு வழக்காடும் நுகா்வோா் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்றாா்.