ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

உறுப்பினா் விஸ்வநாதன் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல்

உறுப்பினா் விஸ்வநாதன் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல்

Updated On :26 பிப்ரவரி 2024, 11:00 pm

புது தில்லி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலருமான எம். விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

விஸ்வநாதன் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானாா். துவாரகாலயா என்ற கலாசார அமைப்பை நிறுவி மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை தில்லியில் நடத்தியவா்.

அமைப்பின் சாா்பில் ஏழை மாணவா்களுக்கு பள்ளி கட்டணத்தையும் வழங்கி வந்தாா். ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலராக தன்னை ஈடுபடுத்தி கொண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டிருந்தாா்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம். அவரது இழப்பு ஆன்மிக பக்தா்களுக்கும், தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும், தில்லி வாழ் தமிழா்களுக்கும் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளனா்.