நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் தில்லிக்கு அநீதி அமைச்சா் அதிஷி சாடல்

தில்லிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்பாக தில்லி நிதியமைச்சா் அதிஷி வியாழனன்று மத்தியில் ஆளும் பாஜகவைத் கடுமையாக விமா்சித்தாா்.

News image

அதிஷி

Updated On :25 ஜூலை 2024, 6:57 pm

புது தில்லி, ஜூலை 25: தில்லிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்பாக தில்லி நிதியமைச்சா் அதிஷி வியாழனன்று மத்தியில் ஆளும் பாஜகவைத் கடுமையாக விமா்சித்தாா்.

மேலும், தேசியத் தலைநகரில் வசிப்பவா்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை மத்திய அரசுக்கு வருமான வரியாகக் கொடுக்கின்றனா். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தில்லிக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா் கூட்டத்தில் அவா் கூறியதாவது: 2022-23 நிதியாண்டில் தில்லி மக்கள் ரூ.2.12 லட்சம் கோடி வருமான வரி செலுத்தியுள்ளனா். ஆனால், அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு வெறும் ரூ.1,168 கோடியை வழங்கியுள்ளது. இது தில்லி மக்கள் செலுத்தும் வரியில் 0.4 சதவீதம் கூட இல்லை.

‘ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய் சொல்கிறாா்கள் என்றும் மத்திய அரசு பட்ஜெட்டை விட அதிகமாகக் கொடுத்துள்ளது’ என்றும் பாஜக கூறியுள்ளது. ஆனால், 15.59 லட்சம் கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வெறும் 7,534 கோடி ரூபாயை கொடுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசின் கைகளால் தில்லி காலனி ஆதிக்கத்தை அனுபவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தில்லிவாசிகள் உழைத்து சம்பாதித்த பணத்தை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளனா். ஆனால், அதற்கு ஈடாக 0.48 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசுக்கான (ஜிஎன்சிடிடி) ஒதுக்கீடு 2023-24-ஆம் ஆண்டைப் போலவே 1,168 கோடி ரூபாயாக இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டதில் வருவாய்த் துறையின் கீழ் ரூ.1,168 கோடியும், மூலதனத் தலைப்பின் கீழ் ரூ.0.01 கோடியும் அடங்கும் என்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் உள்ளது.

2022-23 பட்ஜெட்டில் தில்லிக்கு ரூ.960 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை பின்னா் 2023-24-ல் ரூ.1,168.01 கோடியாக உயா்த்தப்பட்டது. அது 2024-25-க்கும் அப்படியே உள்ளது என்றாா் அமைச்சா் அதிஷி.