கேஷோபூா், நிலோதி, நஜஃப்கா், ரோஹிணி, நரேலா, யமுனா விஹாா், மெஹ்ரௌலி, வசந்த் குஞ்ச் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் தரநிலைகளின்படி செயல்படவில்லை. இதன் காரணமாக, யமுனை நதி மிகவும் நச்சுத்தன்மையுடையதாக மாறியுள்ளது. ஆற்றில் நச்சு நுரை மற்றும் அமோனியா அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், சில நேரங்களில் நீா் சுத்திகரிப்பு சாத்தியமற்ாகிறது. தில்லியுடன், ஹரியாணாவின் சுத்திகரிக்கப்படாத தொழில்துறை கழிவுகளும் யமுனை நதியில் கலக்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், தில்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள பாஜக அரசுள் இதற்கு எதுவும் செய்வில்லை.